Tuesday, July 23, 2019

பெண்

மண்ணில் பெண்ணாய்ப் பிறந்தவளே உனது
கண்ணில் புதுயுகம் காணுகிறேன் வாழ்வில்
வண்ணம் கூட்டிடும் தேவதையே உந்தன்
எண்ணத்தின் மேன்மையே உனதென் றரிவாய் !

கல்வியைக் களிப்புடன் கற்றுணர்வாய் மேலும்
பல்கலையும் பயின்று பொலிவுறுவாய் பேசும்
சொல்லழகால் களிப்புறும் மாந்தரெலாம் வாழும்
இல்லழகும் கண்டு வியக்கச் செய்வாய் !

தாய்தந்தை பேணுங்கடமை செய்வாய் அன்பால்
வாய்க்கும் கணவன்கை வலிமைகூட்டுவாய் பெற்ற
சேய்க்ட்கும் அன்னையாய் பண்பூட்டுவாய் உன்னை
நோயெதுவும் அண்டாமலுன் நலமும் நாடுவாய் !

எந்திரங்கள் கற்றுத் தேர்ந்திடுவாய் பிணிதீரும்
தந்திரங்கள் பற்பலவும் பயின்றிடுவாய் நாடுவக்கும்
மந்திரியும்  தானாகி  ஒளிர்ந்திடுவாய் வனப்பூட்டும்
சந்திரனைக் கண்டறியக் கலமும் இயக்குவாய் !

பாரதி கண்டநற் புதுமைப்பெண்ணாய் இல்வாழ்வில்
சாரதி யாகவும்நீ வழிநடத்துவாய் காத்திடும்
காரிருள் வண்ணனின் கருணையினால் இயங்கும்
பார்புகழ் வெற்றியை உனதாக்குவாய் !

9 comments:

  1. பெண்ணின் வலிமையை உணர்ந்திடுவாய்...
    பெண்ணே வலிமையென உணர்த்திடுவாய்..

    ReplyDelete
  2. Please identify yourself when you post the comment. 🙏🏼

    ReplyDelete
  3. Very nice poem encouraging women

    ReplyDelete

நிறைந்தவன்

 கண்ணனைக் கண்டெடுத்து மண்புழுதி அழுக்ககற்றி எண்ணம் போலவனை வண்ணம் செய்திட்டேன்! விண்ணோர் தொழுமழகன் எண்ணம் நிறைத்தான்! கண்ணின்று அகலாது என்னுள...