Friday, October 4, 2019

திருக்கேட்டை



அலைகடல்  தனில்துயின்ற ஆதிபிரான் உவகையுற
அலைகடல் உதித்தநம் அன்னையவள் மனமுவக்க
அலைகடல் வந்ததெனத் திரளடியார் கொண்டாட
ஆதிவண் சடகோபரே திருநாள் கண்டருளும் !

ஓதிடும் அந்தணர்கள் ஒருமையுடன் பதம்பணிந்து
சோதியை நிகர்க்கும்பொற் குடங்களில் நீரேந்தி
மேதினியில் நீருதித்த நந்நாளைக் கொண்டாட
ஆதிவண் சடகோபரே திருநாள் கண்டருளும் !

அஞ்சேலென் றருளன்னல் அரவணைக்கும் அன்னையர்கள்
சஞ்சலமொழி சக்கரத்துடன் சமரச முறைத்தமுனி
விஞ்சுபுகழ் தேசிகர்சூழ வியன்கவி ஆழ்வார்களுடன்
மஞ்சனமாடும் கோவேவும் மக்களெமைக் காத்தருளும்!

சந்தமிகு கவியிசைத்து கந்தம்கமழ் மலர்தூவி
சந்தனமதை குளிரவப்பி நந்தவனத் துழாய்சாற்றி
இந்திரன் முதலான இமயாவமரர் கூட்டமெலாம்
உம்துதி பாடிப்போற்ற உகந்தெமைக் காத்தருளும் !

1 comment:

நிறைந்தவன்

 கண்ணனைக் கண்டெடுத்து மண்புழுதி அழுக்ககற்றி எண்ணம் போலவனை வண்ணம் செய்திட்டேன்! விண்ணோர் தொழுமழகன் எண்ணம் நிறைத்தான்! கண்ணின்று அகலாது என்னுள...