தான்தவழும் தளத்தோடு சற்றேனும் ஒட்டுணராது
தன்தனித் தன்மையால் உருண்டோடிக் களித்தாங்கே
வானின்று வருமொளியைப் பற்றாமல் எதிரொளிக்கும்
சாமானிய நீர்த்துளியும் வைரமென ஒளிர்வதுபோல்
தாமிருக்கும் நிலையோடு ஒன்றாமல் எக்கணமும்
ஊனுற்ற உடல்கடந்த ஆன்மஞானம் தனைவிழைந்து
வரும்பொருள் பற்றாமல் உரியவர்க்கு வழங்குமன்பர்
அரும்பொருள் ஆசியால் வெற்றிபெற் றொளிர்ந்திடுவர் !
நீர்த்துளி ஞானம் பெற்று
ReplyDeleteநீங்காத அவனைப் பெற
நீரில்உள்ளான் அவனருள
நீக்கமற நிறைவோமே
RamaswRam
ReplyDeleteRamaswamyg
ReplyDelete🙏🏼
Deleteஎன்ன ஒரு அருமையான தமிழ் நடை. பனித்துளியின் பண்போடு வாழ்வியலில் நாம் அடைய வேண்டிய இலக்கின் அடையாளம் காட்டியது மிகவும் அருமை
ReplyDeleteமிக்க நன்றி 🙏🏼
Deleteஅருமை...பாராட்டுக்கள் ...
ReplyDeleteநன்றிகள் பல 🙏🏼
DeleteNice lines instigating detachment.
ReplyDeleteThank you.
DeleteNicely written ... Kudos to you... God bless
ReplyDeleteAbove by Laxmi narayanan
ReplyDeleteThank you.
ReplyDelete