வளம்தரும் திருமகளின் அருளமுதம் அவள் என்றும்
அளப்பறிய ஞானமுடை கலைமகளின் பிம்பம்
இளமதி தனைச்சூடும் மலைமகள் உருவமவள்
நலம்பல சேர்த்திடும் நிலமகளின் வடிவம்
சேற்றினிலே கால்வைத்து நெற்கதிர் தருவாள் பின்
ஏற்றமுடன் உணவுதந்து பசியாற்றி மகிழ்வாள்
காற்றினிலே செவிசேறும் கீதமிசைத்து குழவியைத்
தேற்றித் தாலாட்டிக் கண்ணயறச் செய்வாள்
கருத்துடன் பயிற்றிடும் ஆசிரியை ஆகிடுவாள்
விருப்பமுடன் பணிசெய்யும் செவிலியும் தானாவாள்
மருத்துவம் பயின்று மக்களின் பிணிதீர்ப்பாள்
வருத்தம் களைந்து வாழ்வளித்து உதவிடுவாள்
திடம்கொண்டு தீமைகளைத் தடுத்திட முனைந்திடுவாள்
திண்மையான மனத்துடன் திறம்பட காவல்செய்வாள்
தீர்ப்புகள் எழுதிட தராசுதனைப் பிடிப்பாள்
தீந்தமிழ் சுவைசொட்டும் தித்திக்கும் கவிபுனைவாள்
கணினிகள் தமையியக்கி சாதனைகள் செய்திடுவாள்
அணியாம் அன்புகொண்டு வேதனைகள் தீர்த்திடுவாள்
இனிமையாய் இயற்கையாய் இயக்கமும் தானாகி
பணிகள் பலசெய்து பாரகம் உய்யச்செய்வாள்!
D

No comments:
Post a Comment