நோயுற்ற மாந்தர்குறை தீர்க்கவொன்று முற்படும்
பாயுமலை பேசிவழி பணிக்குமொன்று முயன்றிடும்
காய்கனிகள் சேர்த்துணவு சமைக்கவொன்று செயல்படும்
ஆய்ந்துநல்ல அறிவுசொல்லி தேற்றவொன்று முன்வரும்
தாயாகப் பணிகள்செய்து தாங்கவொன்று தான்வரும்
சேயாக பெற்றவரை அணைக்கவொன்று விரைந்திடும்
தேயாமல் மனவளத்தைக் காக்கவொன்று துடித்திடும்
ஓயாமல் கண்ணன்புகழ் வடிக்கவொன்று விழைந்திடும்
பிறவியதன் பயனதுநம் கடமைதனைச் செய்தருமை
உறவதற்கும் நட்பினுக்கும் உற்றதுணை ஆவதாம்
நெறியுடனே செயலனைத்தும் நாலிரண்டு கைக்கொண்டு
அரியவனின் அருளாலே செய்துவெற்றி காணலாம்!
No comments:
Post a Comment