Thursday, February 18, 2021

பல்பணி

 நோயுற்ற மாந்தர்குறை தீர்க்கவொன்று முற்படும்

பாயுமலை பேசிவழி பணிக்குமொன்று முயன்றிடும்

காய்கனிகள் சேர்த்துணவு சமைக்கவொன்று செயல்படும்


ஆய்ந்துநல்ல அறிவுசொல்லி தேற்றவொன்று முன்வரும்


தாயாகப் பணிகள்செய்து தாங்கவொன்று தான்வரும்


சேயாக பெற்றவரை அணைக்கவொன்று விரைந்திடும்


தேயாமல் மனவளத்தைக் காக்கவொன்று துடித்திடும்


ஓயாமல் கண்ணன்புகழ் வடிக்கவொன்று விழைந்திடும்


பிறவியதன் பயனதுநம் கடமைதனைச் செய்தருமை


உறவதற்கும் நட்பினுக்கும் உற்றதுணை ஆவதாம்


நெறியுடனே செயலனைத்தும் நாலிரண்டு கைக்கொண்டு


அரியவனின் அருளாலே செய்துவெற்றி காணலாம்!

No comments:

Post a Comment

நிறைந்தவன்

 கண்ணனைக் கண்டெடுத்து மண்புழுதி அழுக்ககற்றி எண்ணம் போலவனை வண்ணம் செய்திட்டேன்! விண்ணோர் தொழுமழகன் எண்ணம் நிறைத்தான்! கண்ணின்று அகலாது என்னுள...