அச்சமற்ற மனநிலையும் ஆளுமையால் நிமிர்தலையும்
துச்சமான அடிமையெண்ணம் தகர்த்தெறியும் தெள்ளறிவும்
கொச்சையான குறுமனத்தால் குறைவடையா நல்லுலகும்
உச்சரிக்கும் தருணமெலாம் உண்மையுரு வானசொல்லும்
திண்ணமான உழைப்பெல்லாம் திரண்டடையும் பூரணமும்
எண்ணத்தில் பழையதெனும் வறட்சியற்ற சீரோட்டமும்
அண்ணலே உனதருளால் விரிந்துயர் செயலாக்கமும்
கொண்டதோர் சுவர்க்கமதில் என் நாட்டவர் விழிப்புறுக!
குருதேவ் ரபீந்திரநாத தாகூர் எழுதிய “Where the mind is without fear” என்ற கவிதைக்கு மரு.சே.ஜெயலட்சுமியின் தமிழாக்கம்.
No comments:
Post a Comment