Thursday, February 18, 2021

விழிப்புறுக

 அச்சமற்ற மனநிலையும் ஆளுமையால் நிமிர்தலையும்

துச்சமான அடிமையெண்ணம் தகர்த்தெறியும் தெள்ளறிவும்

கொச்சையான குறுமனத்தால் குறைவடையா நல்லுலகும்


உச்சரிக்கும் தருணமெலாம் உண்மையுரு வானசொல்லும்


திண்ணமான உழைப்பெல்லாம் திரண்டடையும் பூரணமும்


எண்ணத்தில் பழையதெனும் வறட்சியற்ற சீரோட்டமும்


அண்ணலே உனதருளால் விரிந்துயர் செயலாக்கமும்


கொண்டதோர் சுவர்க்கமதில் என் நாட்டவர் விழிப்புறுக!




குருதேவ் ரபீந்திரநாத தாகூர் எழுதிய “Where the mind is without fear” என்ற கவிதைக்கு மரு.சே.ஜெயலட்சுமியின் தமிழாக்கம். 

No comments:

Post a Comment

நிறைந்தவன்

 கண்ணனைக் கண்டெடுத்து மண்புழுதி அழுக்ககற்றி எண்ணம் போலவனை வண்ணம் செய்திட்டேன்! விண்ணோர் தொழுமழகன் எண்ணம் நிறைத்தான்! கண்ணின்று அகலாது என்னுள...