அறிவியலும் கணக்கும் தெளிந்த இலக்கணமும்
மருத்துவமும் மனவியலும் மாநிலத்தின் பொருளியலும்
கருத்துடன் கற்பவர்க்கு கனிவுடன் அருள்செய்யும்
பரிமுகன் அடிதொழ பெருமைகள் சேர்ந்திடுமே!
பலகலையும் கற்றிந்தப் பாரினிலே மேன்மையுற்று
உலகெலாம் வணங்கிடும் வகையினில் கீர்த்திபேற்று
அலகிலாது விளையாடும் அமலனடி சேர்ந்தவனை
விலகாது பணிசெய்யும் பெரும்பேறு கிட்டிடுமே!

No comments:
Post a Comment