Thursday, February 18, 2021

ஆன்மஞானம்

அருணனாய் அகிலமாய் பரந்தபேர்  அண்டமாய்

பெரியதாய் சிறியதாய் உரியதாய் வித்தாய்

கருணையாய் கருவாய் காட்சியாய் கருத்தாய்

விரிந்ததோர் பரம்பொருளை விழிமூடித் தேடுவரோ!


முகுந்தனின் உருவமாய்ப் படர்ந்திடும் எழில்வடிவை

முகக்கண் கொண்டு முச்சூடும் உணர்ந்திடுக!

அகிலமெலாம் காத்திடும் அமலனின் அருள்வடிவை

அகக்கண் கொண்டுணர்ந்து ஆன்மஞானம் பெற்றிடுக!


No comments:

Post a Comment

நிறைந்தவன்

 கண்ணனைக் கண்டெடுத்து மண்புழுதி அழுக்ககற்றி எண்ணம் போலவனை வண்ணம் செய்திட்டேன்! விண்ணோர் தொழுமழகன் எண்ணம் நிறைத்தான்! கண்ணின்று அகலாது என்னுள...