Wednesday, August 7, 2019

திருக்கை





கரியதனுக் கருள்புரிய 
துயில்களைந்து திகிரிகொண்டு
அண்டமெலாம் கடந்தோடி 
விரைந்தருள் புரிந்ததும்

அரியறிவான் சிறுவன்றனை 
அரவணைக்க நகங்கொண்டு
அண்டமெலாம் பிளந்தெழுந்து 
சிங்கமாய் அருளியதும்

அரும்பெரும் ஆயர்குலம் 
காத்திடவே கிரியேந்தி 
அண்டமெலாம் வியந்தாங்கே 
போற்றிட விளங்கியதும் 

தருமமதை நிலைநாட்ட 
பார்த்தனுக்குத் தேரோட்டி
அண்டமெலாம் உட்கொண்ட 
பேருருவம் காட்டியதும்



திருக்கை பெருங்கை சிறுகை 
வெற்றிச்செங்கை யாமே !




இந்த பாடல் பரமனின் அளவற்ற அன்பால் அவன் நமது துயரங்களைக் களய அபயக்கரம் நீட்டிய அழகை வர்ணிக்கின்றது. நிரல் நிறைப் பொருள் கோள் எனும் வகையைச் சார்ந்தது. ஒவ்வொறு நான்கு அடிக்கான கைவண்ணமும் கடைசி இரண்டடியில் அந்த நான்கு அடிகள் அமைந்த வரிசையிலேயே அமைக்கப்பட்டுள்ளது. கஜேந்திரனுக்கு அருளிய திருக்கை நரஸிம்ஹாவதாரத்தில் பேருருவம் எடுத்துப் பெருங்கை ஆயிற்று. பின்னர் ஆயர்குலக் கொழுந்தாய் சிறுகையால் கிரியேந்தியது. அதுவே பார்த்தனுக்குத் தேரோட்டிச் சிவந்து செங்கையானது. படித்து இன்புறுங்கள் !

2 comments:

  1. We got to raise our standards of Tamil and capacity to comprehend complex words, to fully enjoy your standard poetry. Well written.

    ReplyDelete

நிறைந்தவன்

 கண்ணனைக் கண்டெடுத்து மண்புழுதி அழுக்ககற்றி எண்ணம் போலவனை வண்ணம் செய்திட்டேன்! விண்ணோர் தொழுமழகன் எண்ணம் நிறைத்தான்! கண்ணின்று அகலாது என்னுள...