அன்பின் உருவம் நீ
அறிவுச்சுடர் வடிவம் நீ
ஆறுமுகன் அன்னை நீ
ஆதிசிவனின் பாதி நீ
இடர்நீக்கும் உத்தி நீ
இன்பமதன் வித்து நீ
ஈடிலாக் கருணை நீ
ஈத்துவக்கும் தாயும் நீ
உலகியக்கும் ஊக்கம் நீ
உயர்வளிக்கும் ஆக்கம் நீ
ஊற்றெடுக்கும் கவியேற்று
வரமருளும் மாரி நீ
எல்லையம்மனாய் வந்து
எம்மையாட் கொண்டாய் நீ
ஏறுடையான் தோழி நீ
ஏற்றம் அருள்பவள் நீ
ஐங்கரனை ஈன்றவள் நீ
ஐயம்நீக்கும் மருந்தும் நீ
ஒப்பிலாத் தூமணி நீ
ஒளியேற்றும் சோதி நீ
ஓதுவார் நெஞ்சில் நின்று
கோதகற்றும் சக்தி நீ
ஔடதமாம் அருள்தந்து
அரவணைக்கும் அம்பிகை நீ
வேதங்கள் தொழுமழகே
வெற்றிமாலை அணிபவளே
பாதங்கள் பணிகின்றோம்
பரிந்தெமைக் காத்திடுவாய் !
PC : Adithya Murali

No comments:
Post a Comment