Wednesday, August 14, 2019

எல்லையம்மா





அன்பின் உருவம் நீ 
               அறிவுச்சுடர் வடிவம் நீ
ஆறுமுகன் அன்னை நீ 
               ஆதிசிவனின் பாதி நீ
இடர்நீக்கும் உத்தி நீ 
                இன்பமதன் வித்து நீ
ஈடிலாக் கருணை நீ 
                 ஈத்துவக்கும் தாயும் நீ
உலகியக்கும் ஊக்கம் நீ 
                 உயர்வளிக்கும் ஆக்கம் நீ
ஊற்றெடுக்கும் கவியேற்று 
                 வரமருளும் மாரி நீ
எல்லையம்மனாய் வந்து 
                 எம்மையாட் கொண்டாய் நீ
ஏறுடையான் தோழி நீ 
                 ஏற்றம் அருள்பவள் நீ
ஐங்கரனை ஈன்றவள் நீ 
                 ஐயம்நீக்கும் மருந்தும் நீ
ஒப்பிலாத் தூமணி நீ 
                 ஒளியேற்றும் சோதி நீ
ஓதுவார் நெஞ்சில் நின்று 
                 கோதகற்றும் சக்தி நீ
ஔடதமாம் அருள்தந்து 
                 அரவணைக்கும் அம்பிகை நீ
வேதங்கள் தொழுமழகே
                  வெற்றிமாலை அணிபவளே
பாதங்கள் பணிகின்றோம்
                   பரிந்தெமைக் காத்திடுவாய் !

PC : Adithya Murali



No comments:

Post a Comment

நிறைந்தவன்

 கண்ணனைக் கண்டெடுத்து மண்புழுதி அழுக்ககற்றி எண்ணம் போலவனை வண்ணம் செய்திட்டேன்! விண்ணோர் தொழுமழகன் எண்ணம் நிறைத்தான்! கண்ணின்று அகலாது என்னுள...