Tuesday, August 6, 2019

திருவடிகள்


நாமமதே புகலென்ற பாலன்தொழும் திருவடிகள் 
வாமனனாய் மண்கேட்டு உலகளந்த திருவடிகள்
கோமகன் இராமனாய் நிலமகள்தன் கரம்பிடித்து
காமுகன் செருக்கழிய காடளந்த திருவடிகள்

ஆவினங்கள் தழைத்திட இடைநடந்த திருவடிகள்
தேடிமகிழ் கோபியர்கள் கொண்டாடும் திருவடிகள்
தோழனாக பாண்டவர்க்குத் தூதுசென்ற சேவடிகள்
பாழ்மனம் பண்படுத்தும் பரந்தாமன் திருவடிகள்!


No comments:

Post a Comment

நிறைந்தவன்

 கண்ணனைக் கண்டெடுத்து மண்புழுதி அழுக்ககற்றி எண்ணம் போலவனை வண்ணம் செய்திட்டேன்! விண்ணோர் தொழுமழகன் எண்ணம் நிறைத்தான்! கண்ணின்று அகலாது என்னுள...