நாமமதே புகலென்ற பாலன்தொழும் திருவடிகள்
வாமனனாய் மண்கேட்டு உலகளந்த திருவடிகள்
கோமகன் இராமனாய் நிலமகள்தன் கரம்பிடித்து
காமுகன் செருக்கழிய காடளந்த திருவடிகள்
ஆவினங்கள் தழைத்திட இடைநடந்த திருவடிகள்
தேடிமகிழ் கோபியர்கள் கொண்டாடும் திருவடிகள்
தோழனாக பாண்டவர்க்குத் தூதுசென்ற சேவடிகள்
பாழ்மனம் பண்படுத்தும் பரந்தாமன் திருவடிகள்!

No comments:
Post a Comment