Saturday, August 3, 2019

கோதை


 


வில்லிபுத்தூர் வந்துதித்த விட்டுசித்தன் சேயே
தொல்லுதமிழ் கவிதொடுத்த கோதையே தாயே

லா......லி

ஆடிப்பூரம் அவதரித்த அவனிமகள் நீயே
ஆதிபிரான் கரம்பிடிக்க ஆசைகொண் டாயே

லா......லி

பூமாலை தனைச்சூடி பூரித்துநின் றாயே
பாமாலை பாடியவன் பத்தியுரைத் தாயே

லா.......லி

அன்பருளம் கவருமந்த அரங்கன்கொள் மாதே
மன்னுபுகழ் தமிழீன்ற மாதரசி கோதே

லா........லி

கண்ணன்கைத் தலம்பற்றக் கனவுகண் டாயே - மணி
வண்ணனுடன் சேர்ந்தெமக்கு வாழ்வளிக்கும் தாயே

லா........லி

6 comments:

  1. Very nice kavidhai on Aadi pooram👌👏👏👏👏-Latha Giridharan

    ReplyDelete
  2. ஆடி பூரத்து கோதைக்கு பாங்காக அமைத்த லாலிக்கு வந்தனம்

    ReplyDelete

நிறைந்தவன்

 கண்ணனைக் கண்டெடுத்து மண்புழுதி அழுக்ககற்றி எண்ணம் போலவனை வண்ணம் செய்திட்டேன்! விண்ணோர் தொழுமழகன் எண்ணம் நிறைத்தான்! கண்ணின்று அகலாது என்னுள...