Wednesday, December 11, 2019

பாரதி


முண்டாசுக் கவிஞன் கொண்டாடிய கண்ணனை 
முழுதும் ரசித்துப் பார்-அங்கே முத்தியின் நிலை தெரியும்!

மீசைக் கவிஞன் ஆசையாய் அன்னையை 
பேசு தமிழ் சுவைத்து பார்-அதில் தேசியம் விளங்கிவிடும்! 
            
தீந்தமிழ் சொல் தொடுத்த தீக்கனல் பாரதியின் 
தித்திக்கும் கவிதை பார்-மனதில் திண்மை மிகுந்து விடும்!
            
நேர்கொண்ட பார்வையுடன் சீர்செய்யும் அவன் கவியை 
ஓர் முறை படித்துப் பார்-உள்ளம் ஒருமையுற்று உயர்ந்துவிடும்!
           
 பழகுதமிழ் சொல்லெடுத்து பாவையர் மேன்மை சொன்ன 
அழகொளிரும் ஆண்மை பார்-உலகின் ஆற்றல் பெருக்கெடுக்கும்! 
           
காணும் பொருளிலெலாம் கவித்துவம் பதித்த கலை 
வாணியின் பிம்பம் பார்-உன் வாழ்க்கை முழுமை பெறும்!


No comments:

Post a Comment

நிறைந்தவன்

 கண்ணனைக் கண்டெடுத்து மண்புழுதி அழுக்ககற்றி எண்ணம் போலவனை வண்ணம் செய்திட்டேன்! விண்ணோர் தொழுமழகன் எண்ணம் நிறைத்தான்! கண்ணின்று அகலாது என்னுள...