Thursday, October 24, 2019

தாலாட்டு


கயிறதனால் தொங்கிடுமித் தொட்டிலதைத்  தட்டிவிடின்
உயிருறையும் ஊனுடம்பு பிறவிகொண்டு அலைவதுபோல்
தயிருறையும் வெண்ணயுண்ட மாயனவன் தனைச்சுமந்து
உயர்ந்தேறி தாழ்ந்திறங்கி வாழ்வியலை உணர்த்துதம்மா!

தாயவளின் அரவணைப்பில் கண்ணயரும் சிசுக்கெல்லாம்
மேவியவள் மேனிநுகர் ஆடையதே தொட்டிலாம்போல்
ஆயனருட் கருணையினால் பிறவிகொண்ட மாந்தர்க்குத்
தூயவன் துலங்கிநிற்கும் தொல்லுலகே  தொட்டிலம்மா !

மதுரமான குரலிலன்னை தாலாட்டும் இசைகேட்டு
பதறாமல் குழவியது பாங்குடனே துயில்வதுபோல்
கதிர்மறைக்கும் திகிரிவிட்டு அதிர்வெண் சங்கமேந்தி
அதரமீந்த அமுதுகேட்க அகத்தமைதி கிட்டுமம்மா !

No comments:

Post a Comment

நிறைந்தவன்

 கண்ணனைக் கண்டெடுத்து மண்புழுதி அழுக்ககற்றி எண்ணம் போலவனை வண்ணம் செய்திட்டேன்! விண்ணோர் தொழுமழகன் எண்ணம் நிறைத்தான்! கண்ணின்று அகலாது என்னுள...