கண்பார்க்கும் காட்சிநீ கண்டுணரும் விழியும்நீ
பண்கேட்கும் செவியும்நீ செவியறியும் ஓசைநீ
மண்தாங்கும் தாவரம்நீ தாங்கிநிற்கும் புவியும்நீ
எண்ணும் எழுத்தும்நீ எங்கும்நிறை வெளியும்நீ
விண்வளர் விசையும்நீ விரிந்தஎண் திசையும்நீ
வண்டாடும் மலர்மார்பா விரிசடைக் குழலினாய்
தண்டாமரை உதித்தோய் தகுதியில் நிகரில்லாய்
அண்டங்கள் அனைத்தும்நீ ஆதாரமும் நீதானே
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

No comments:
Post a Comment