நீருண்ட மேகநிறத் தழகொளிரும் கண்ணனுடன்
பாராளும் கலப்பைகொள் பலராமனும் சுபத்ரையும்
தேரினிலே தோன்றிநம் வல்வினை வேரருக்க
பூரியெனும் பதிதன்னில் யாத்திரை கண்டனரே!
உருண்டு ஓடிடும் ரதமே உடம்பாக
பரந்து விரிந்திடும் வாழ்வதுவோர் யாத்திரையாம்
திரண்ட பூரணம் ஆற்றலாய் கொலுவிருக்க
விரைந்து செலுத்தும் விசையே நாரணனாம் !
அச்சும் அதன் ஆணியும் அதன்மேலே
உச்சம் தொடும் உயர்ந்த தேருமதை
இச்சை மேலிட இழுத்துவக்கும் மாந்தரும்
கச்சை அணிந்து கைதொழும் அடியவரும்
பச்சைத் துழாய்மாலை தொடுத்தளிக்கும் அன்பரும்
கொச்சை மொழிபேசிக் கும்பிடும் மழலையரும்
அச்சுதா அனந்தனென்று கோண்டாடும் பத்தர்களும்
மிச்சம் மீதுள யாவும் மாலவனே!


No comments:
Post a Comment