Saturday, August 31, 2019

பிள்ளையார்




ஓரெழுத்து மந்திரமாம் பரணவமதை த்யானித்து
நீரெடுத்து கணபதியின் நாமம்சொலிப் பூசுவோம் !

இரண்டு கைகூப்பி இனியவனைத் தொழுதிடுவோம்
மருண்ட மனந்தெளிய மகோதரனை நாடிடுவோம் !

முப்புரம் எரிசெய்த முக்கண்ணன் மைந்தனவன்
முத்தமிழ் வளர்த்தகுறு முனிவன்பணி முதல்வனவன் !

நான்மறை தொழுதிடும் ஞானமணி விநாயகன்
நாரணன் சோதரியாம் உமையம்மை பாலனவன் !

ஐங்கரம் கொண்டவன் அண்டமெலாம் காப்பவன்
ஐயங்கள் தீர்த்துநம் அறிவுச்சுடர் வளர்ப்பவன் !

ஆறுமுகன் அண்ணனவன் அருள்வடிவம் கொண்டவன் 
ஆறுதல் அளித்துநமை ஆட்கொள்ளும் ஆனைமுகன் !

ஏழுஸ்வரம்  கொண்டவனை போற்றியே இசைத்திட
ஏற்றமிகு வாழ்வருளும் ஏறுடையோன் செல்வனவன் !

எண்திசையும் வியாபித்து எளியோர்க்கு அருள்பவன்
பண்பாடித் துதித்திட கேட்கும்வரம் தருபவன் !

ஒன்பதுவகை பக்திசெய்ய ஓடிவந்து காத்திடுவான்
அன்பருளம் நிறைந்திடவே வெற்றியெலாம் தந்திடுவான் !

No comments:

Post a Comment

நிறைந்தவன்

 கண்ணனைக் கண்டெடுத்து மண்புழுதி அழுக்ககற்றி எண்ணம் போலவனை வண்ணம் செய்திட்டேன்! விண்ணோர் தொழுமழகன் எண்ணம் நிறைத்தான்! கண்ணின்று அகலாது என்னுள...