தமிழ்ச்சோலை
Friday, July 16, 2021
நிறைந்தவன்
கண்ணனைக் கண்டெடுத்து
மண்புழுதி அழுக்ககற்றி
எண்ணம் போலவனை
வண்ணம் செய்திட்டேன்!
விண்ணோர் தொழுமழகன்
எண்ணம் நிறைத்தான்!
கண்ணின்று அகலாது
என்னுளே நிறைந்தான்!
Wednesday, July 14, 2021
ரத யாத்திரை
நீருண்ட மேகநிறத் தழகொளிரும் கண்ணனுடன்
பாராளும் கலப்பைகொள் பலராமனும் சுபத்ரையும்
தேரினிலே தோன்றிநம் வல்வினை வேரருக்க
பூரியெனும் பதிதன்னில் யாத்திரை கண்டனரே!
உருண்டு ஓடிடும் ரதமே உடம்பாக
பரந்து விரிந்திடும் வாழ்வதுவோர் யாத்திரையாம்
திரண்ட பூரணம் ஆற்றலாய் கொலுவிருக்க
விரைந்து செலுத்தும் விசையே நாரணனாம் !
அச்சும் அதன் ஆணியும் அதன்மேலே
உச்சம் தொடும் உயர்ந்த தேருமதை
இச்சை மேலிட இழுத்துவக்கும் மாந்தரும்
கச்சை அணிந்து கைதொழும் அடியவரும்
பச்சைத் துழாய்மாலை தொடுத்தளிக்கும் அன்பரும்
கொச்சை மொழிபேசிக் கும்பிடும் மழலையரும்
அச்சுதா அனந்தனென்று கோண்டாடும் பத்தர்களும்
மிச்சம் மீதுள யாவும் மாலவனே!
Friday, April 23, 2021
Wednesday, April 21, 2021
Monday, April 19, 2021
Subscribe to:
Comments (Atom)
நிறைந்தவன்
கண்ணனைக் கண்டெடுத்து மண்புழுதி அழுக்ககற்றி எண்ணம் போலவனை வண்ணம் செய்திட்டேன்! விண்ணோர் தொழுமழகன் எண்ணம் நிறைத்தான்! கண்ணின்று அகலாது என்னுள...
-
I பிறவியிலிரு கண்ணிழந்த தந்தையோ பேரரசன் உறவதனால் விழிமூடிய அன்னையவள் அரசியாம் பிறந்தவிளம் பிள்ளைகள் தாயின்பார்வை அற்றதால் தி...
-
தான்தவழும் தளத்தோடு சற்றேனும் ஒட்டுணராது தன்தனித் தன்மையால் உருண்டோடிக் களித்தாங்கே வானின்று வருமொளியைப் பற்றாமல் எதிரொளிக்கும...
-
நாடியே துதித்துநம் அன்பெனும் மலர்சாற்றி தேடியே சென்றுநல் தேமதுரத் தமிழ்பாட கேடிலா வாழ்வெனும் வரமருளும் அத்தியூரான் ஈடிலாக் கருணை...




















